வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

அலங்கார பொன் ஊஞ்சலே - சொன்னது நீ தானா (1978)

அலங்கார பொன் ஊஞ்சலே அழகாடும் பூஞ்சோலையே இளமாதுளை மலைத்தேன் சுவை முத்தாரம் சூடி முத்தாடு கண்ணே . (அலங்கார...) . வானில் உலவும் ஊர்வசி வனத்தில் தவழும் மாங்கனி எனை மயக்க வந்தவள் மாலை பூத்த மல்லிகை மயக்கம் சேர்த்த மெல்லிசை எனை தழுவி நின்றவள் அழகு கலைகள் நிலவும் எந்தன் . (அலங்கார...) . ஏட்டில் பாடும் நாயகி எழுத்தில் கூடும் காரிகை புது எண்ணம் கண்டவள் கூட்டில் வாழும் பைங்கிளி கூடச் சொல்லும் மான் விழி மது கிண்ணம் கொண்டவள் இளமை குலுங்க இனிமை வழங்கும் . (அலங்கார...) . காதல் ராணி குங்குமம் காளை மனதில் சங்கமம் புது இன்பம் துவங்கலாம் கோவில் காணும் பூசைகள் தேவன் கொண்ட ஆசைகள் இனி என்றும் நிலைக்கலாம் புதிய வழியை எடுத்து சொல்லும் . (அலங்கார...)
.
Movie:- Sonnathu Neethana; Year:- 1978; Music Director:- Ilayaraja; Lyricist:- C.N.Muthu; Singers:- Malaysia Vasudevan, Jency (Humming); Cast:- Jaiganesh, Sumithra;
Produced by:- M.S.Chellappan - Vijaya Raja Pictures;
Direction:- C.N.Muthu.
.......




https://mio.to/album/Sonnathu+Nee+Thaana+%281978%29









படைத்தானே பிரமதேவன்

படைத்தானே பிரமதேவன் பதினாறு வயது கோலம் இது யார்மீது பழிவாங்கும் சோதனை - உன்னை காண்போர்க்கு சுகமான வேதனை . அந்த கண்ணாடி நீ பார்க்கும் கண்ணாடியா - இல்லை உன் மேனி அது பார்க்கும் கண்ணாடியா நீயின்றி வானத்தில் நிலவேதடி - அது உனை பாடும் தாலாட்டு நீலாம்பரி இது யார் மீது பழி வாங்கும் சோதனை - உன்னை காண்போர்க்கு சுகமான வேதனை . (படைத்தானே...) . உன்னை ரவிவர்மன் காணாமல் போனானடி - அந்த ரதிமாறன் கண்டாலும் தொலைந்தானடி இது கோடியில் ஒருத்திக்கு வாய்க்கின்றது அது கோடானு கோடியை ஏய்க்கின்றது ஒரு அருள் வேண்டி நான் கேட்டேன் தேவனை - இனி தினந்தோறும் வரவேண்டும் சுகவேதனை . (படைத்தானே...)
~~~~~~~~

திரைப்படம்:- எல்லோரும் நல்லவரே; ரிலீஸ்:- 1975; இசை:- வி. குமார்; பாடல்:- பஞ்சு அருணாச்சலம்; பாடியவர்கள்:- SPB; நடிப்பு:- முத்துராமன், மஞ்சுளா; தயாரிப்பு & இயக்கம்:- ஜெமினி S.S. பாலன்.

~~~~~~

https://youtu.be/hPhIMXcTorQ



செவப்புக்கல்லு மூக்குத்தி

செவப்புக் கல்லு மூக்குத்தி சிரிக்க வந்த மான்குட்டி ஆஹா தங்க முகத்தில குங்குமப் பொட்டு வைச்சுக்கிட்டு - நீ எங்கடி போற சுங்கிடி சேலைக் கட்டிக்கிட்டு
தான் போறப் போக்கில் மான் குட்டி போகும் எங்கேன்னு தான் சொல்லுமோ பேசாத மானை தேடாமல் தேடி பின்னாலே யார் வந்ததோ . (செவப்பு...) . மனசு வச்சேன் உன் மேலே மறைச்சு வைச்சேன் சொல்லாமே அப்படி சொல்லடி சிங்காரி அணைச்சுக் கொள்ளடி ஒய்யாரி சிரிச்சு சிரிச்சு நெருங்கி வந்தா எனக்கு சந்தேகம் நெருங்கி நெருங்கி பழகி விட்டா இருக்கு சந்தோஷம் புதுசா ஒரு தினுசா இள வயசா வந்த பரிசா . (செவப்பு...) . வெளக்கு வச்சு பாய் போட்டு தெருக்கதவ தாள் போட்டு வெளக்கு வச்சு பாய் போட்டு
தெருக்கதவ தாள் போட்டு அரைச்ச சந்தனம் நீ பூச அடுத்த கதைய நான் பேச விடிய விடிய தூங்காமே முழிச்சிருப்போமா வெடிஞ்ச பொறகு நடந்ததெல்லாம் நெனச்சிருப்போமா  திருநாள் ஒண்ணு வரலாம் இனி தரலாம் தந்து பெறலாம் . ஆஹா சரிகைப் பட்டு மாப்பிள்ளை மயக்க வந்த ஆம்பிள்ள வெத்தலப் பாக்கு வைக்கிற தேதி சொல்லு மச்சான் என்னை கள்ளச்சிரிப்பிலே கொள்ளையடிச்சது இந்த மச்சான்
~~~~~~ 
திரைப்படம்:- எல்லோரும் நல்லவரே
ரிலீஸ்:- 1975;
இசை:- வி. குமார்; 
பாடல்:- கண்ணதாசன்; 
பாடியவர்கள்:- TMS, பி. சுசிலா; 
நடிப்பு:- முத்துராமன், மஞ்சுளா; 
தயாரிப்பு & இயக்கம்:- ஜெமினி S.S. பாலன்.   
..

https://youtu.be/mzgKodQXZ-M 





நான் பேச வந்தேன் சொல்ல தான் ஓர் வார்த்தை இல்லை

நான் பேச வந்தேன் சொல்ல தான்
ஓர் வார்த்தை இல்லை, திருவாய் மொழி திருவாசகம் நான் கேளாமல் எனக்கேது ராகங்கள்... நான் பேச வந்தேன் சொல்ல தான் ஓர் வார்த்தை இல்லை, உன் வாய் மொழி, மணிவாசகம் நீ சொல்லமல் என் நெஞ்சில் சொல்லில்லை,  . (நான் பேச வந்தேன் சொல்ல தான் ஓர் வார்த்தை இல்லை,) . ஏழிசை பாடும் இமைகள் இரண்டும் பட பட பட வென வரும் தாபங்கள், ஆலிலை மீது, தழுவிடும் காற்று சல சல சல வென வரும் கீதங்கள்,  குலமகள் நாணம் உடன் வரும் போது மௌனமே இறைவன் தூது, ஒரு கிளி ஊமை ஒரு கிளி பேதை இடையில் தீராத போதை......  . (நான் பேச வந்தேன் சொல்ல தான் ஓர் வார்த்தை இல்லை,) . கார்குழல் மேகம் மூடிய நெஞ்சில் கல கல கல வென வரும் எண்ணங்கள்,  ஒவியம் தீட்டி காட்டிடும் கன்னம் பள பள பள வென வரும் கின்னங்கள்,  சொல் என கண்ணும்   நில் என நெஞ்சும்  சொல்வதே பெண்ணின் தொல்லை நில் என நெஞ்சும்  சொல்வதே பெண்ணின் தொல்லை சிறுகதை ஒருநாள் தொடர்கதை ஆனால் அது தான் ஆனந்த எல்லை..... . நான் பேச வந்தேன் சொல்ல தான் ஓர் வார்த்தை இல்லை, உன் வாய் மொழி, மணிவாசகம் நீ சொல்லமல் என் நெஞ்சில் சொல்லில்லை.
~~~~~~~~
Movie:-Paalooti Valartha Kili, - பாலூட்டி வளர்த்த கிளி; 
Year:- 1976;
Music:- Ilayaraja;
Lyrics:- Kannadasan; Singers:-SPB, S.Janaki; Actors:- Vijayakumar & Sripriya.;
Director:- Devaraj, Mohan.
~~~~~~~~
https://youtu.be/9ZNJncW2220



கணக்குப் பார்த்து காதல் வந்தது - ஆளுக்கொரு ஆசை

கணக்குப் பார்த்து காதல் வந்தது கச்சிதமா ஜோடி சேர்ந்தது ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு ரெண்டும் ஒண்ணும் மூணு மனசு போலவே வாழ்வு வந்தது . (கணக்கு... ) . இலக்கிய காதலுக்கு இங்கே வேலையில்லை எல்லாமே காவியம் இல்லை கற்பனை உலகத்திலே ஆசைகளும் இல்லை கனவுக்கும் வேலை இல்லை நடுத்தர குடும்பத்துக்கு பட்ஜெட்தானே எல்லை வரவுக்கு மேல் செலவு வந்தால் எந்நாளுமே தொல்லை ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு ரெண்டும் ஒண்ணும் மூணு மனசு போலவே வாழ்வு வந்தது . (கணக்கு... ) . ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசை வேறு வேறு எல்லாமே இணைவது இல்லை ஒருவரையொருவர் நன்றாய் புரிந்துக்கொள்ளும் முன்னே சேர்ந்தால் வருவது தொல்லை பின்னால் நடப்பதெல்லாம் முன்னால் புரிவதில்லை முன்னால் புரிந்துவிட்டால் வாழ்வில் சுவையில்லை ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு ரெண்டும் ஒண்ணும் மூணு மனசு போலவே வாழ்வு வந்தது . (கணக்கு... )

.........................

திரைப்படம்:-  ஆளுக்கொரு ஆசை;  
ரிலீஸ்:- 09th டிசம்பர் 1977; 
இசை:- இளையராஜா; 
பாடல்:- பஞ்சு அருணாச்சலம்; 
பாடியவர்:- T.M. சௌந்தர்ராஜன்;  
நடிப்பு:-  ஜெயசித்ரா, R. முத்துராமன்; 
தயாரிப்பாளர்:- ஏ. ராமமூர்த்தி & சினி எண்டர்பிரைசெஸ்
எஸ். ராமமூர்த்தி;
டைரக்சன்:- S.P. முத்துராமன்.  


https://youtu.be/D6nc_IqCYaA 






முல்லை பூ போலெ ரெண்டு மூக்குத்தி மின்னுதடி

முல்லை பூ போலெ ரெண்டு மூக்குத்தி மின்னுதடி 

முல்லை பூ போலெ ரெண்டு மூக்குத்தி மின்னுதடி - உன்தன் 
முந்தானை மேலே கூந்தல் நாட்டியமாடுதடி 
முல்லை பூ போலெ ரெண்டு மூக்குத்தி மின்னுதடி
சித்தன வாசலிலே அழகு சித்திரம் பாடுதய்யா 
சித்தன வாசலிலே அழகு சித்திரம் காணுதய்யா - அந்த 
சித்திர மேனியிலே உந்தன் முத்திரை போடுதய்யா 

வேலவன் வேல் போலெ ரெண்டு விழிகள் மின்னுதையா - புது 
வெள்ளி ரத்தம் போலெ உந்தன் வடிவம் பொங்குதய்யா  
வேலவன் வேல் போலெ ரெண்டு விழிகள் மின்னுதையா 
.
இல்லை இல்லை  என்கிற இடையில் எத்தனை மலரடியோ 
இல்லை இல்லை  என்கிற இடையில் எத்தனை மலரடியோ 
அது ஏதோ ஒன்று என்னிடம் சொல்வது எத்தனை கதையடியோ 

நில்லா இரவில் பொல்லா நிலவில் நேருக்கு நேர் வருவேன் 
நில்லா இரவில் பொல்லா நிலவில் நேருக்கு நேர் வருவேன் - அன்று 
எல்லா கலையும் வில்லாய் எடுத்து வேலாலே தருவேன் 
.
முல்லை பூ போலெ ரெண்டு மூக்குத்தி மின்னுதடி - உன்தன் 
முந்தானை மேலே கூந்தல் நாட்டியமாடுதடி  
வேலவன் வேல் போலெ ரெண்டு விழிகள் மின்னுதையா  
.
பாட்டுக்கால்கள் பட்டதனாலே பஞ்சு விளைந்ததடி - உன் 
சிட்டுக் கைகள் தொட்டதனாலே நெஞ்சும் மலர்ந்ததடி 
கொட்டும் மழையும் பனியும் தென்றலும் கனலாய் காயுதய்யா - உன் 
கூட இருந்தால் பாடி மகிழ்ந்தால் குளிராய் குளிருதய்யா 

பஞ்சணை மீது மலர்களை தூவி பழகுவதென்னாலோ 
பாலும் பழமும் கைகளில் ஏந்தி வருவதும் எந்நாளோ 
பஞ்சணை மீது மலர்களை தூவி பழகுவதென்னாலோ 
.
................
திரைப்படம்:- நல்ல முடிவு; 
ரிலீஸ்:-  மார்ச் 2nd, 1973;
இசை:-  MSV;  
பாடல்:- கண்ணதாசன்; 
பாடியவர்கள்:- TMS, P.சுசிலா;   
நடிப்பு:- ஜெமினி கணேசன், ஜெயந்தி;
தயாரிப்பு:- S.A. ராஜமாணிக்கம்; (பூங்கோதை பிக்சர்ஸ்); 
இயக்குனர்:- C.N. சண்முகம்.   

................







ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் - முதல் தேதி (1955)

ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் - தேதி ஒண்ணிலே இருந்து - சம்பள தேதி ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் - இருபத் தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம் - இருபத் தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம் திண்டாட்டம் திண்டாட்டம் - சம்பளத் தேதி ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் . பண்ணிய வேலைக்குப் பலன் தருவது ஒண்ணிலே தேதி ஒண்ணிலே - மனுஷன் படாத பாடு படுவது இருபத்தொண்ணிலே இருபத்தொண்ணிலே முன்னே பட்ட கடனைத் தீர்ப்பான் ஒண்ணிலே - தேதி ஒண்ணிலே பின்னும் மூணாம் பேஸ்து விழுந்தது போலே முகம் சோர்ந்திடும் இருபத்தொண்ணிலே . ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் . தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும் சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும் சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே அன்புடனே போட்டு வைத்த உண்டியல் வாயைக் கொஞ்சம் அன்புடனே போட்டு வைத்த உண்டியல் வாயைக் கொஞ்சம் அகலமாக்கி ஆட்டிப் பார்ப்பார் இருபத்தொண்ணிலே - ஆமா தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும் சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே சினிமா ட்ராமா காட்சிகளுக்கு டிக்கட் கிடைக்காதொண்ணிலே தியேட்டர் காலி ஆளிருக்காது தேதி இருபத்தொண்ணிலே சிகரெட் பீடி வெற்றிலை பாக்கு விற்பனை அதிகம் ஒண்ணிலே தெருவில் எறிந்த துண்டு பீடிக்கு கிராக்கி வந்திடும் இருபத்தொண்ணிலே கொண்டவனும் கொண்டவளும் குழந்தை குட்டியோடு கும்மாளம் கொட்டுவது ஒண்ணிலே - தேதி ஒண்ணிலே அவர் கூச்சல் கிளப்பிகிட்டு குஸ்திகளும் போட்டுகிட்டு கோணிக்கொள்வார் இருபத்தொண்ணிலே - கொஞ்சம் கோணிக்கொள்வார் இருபத்தொண்ணிலே தம்பிகளின் வாடகை சைக்கிளோட்டம் ஒண்ணிலே தம்பிகளின் வாடகை சைக்கிளோட்டம் ஒண்ணிலே தரையில் நடந்து வருவார் இருபத்தொண்ணிலே நண்பர் நடமாட்டமெல்லாம் ஒண்ணிலே - எந்த நாயும் எட்டிப் பார்க்காது இருபத்தொண்ணிலே கொண்டாட்டந்தான் தேதி ஒண்ணிலே - பின்பு திண்டாட்டந்தான் இருபத்தொண்ணிலே கொண்டாட்டந்தான் தேதி ஒண்ணிலே - பின்பு திண்டாட்டந்தான் இருபத்தொண்ணிலே.

~~~~~~~~~~~
படம்:- முதல் தேதி; 
ரிலீஸ்:- 12th  மார்ச், 1955; 
இசை:- T.G. லிங்கப்பா; 
பாடல் வரிகள்:- உடுமலை நாராயணகவி; 
பாடியவர்:- N.S. கிருஷ்ணன்; 
நடிப்பு:-  N.S. கிருஷ்ணன் & T.A,மதுரம்; 
கதை:- தாதா மிராசி; 
தயாரிப்பு:- B.R. பந்துலு;  (இப்படம் தான் முதல் தயாரிப்பு) 
திரைக்கதை, வசனம் & இயக்கம்:- P. நீலகண்டன்.     
~~~~~~~~~~~~