திங்கள், 11 ஆகஸ்ட், 2014

கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே....



கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே - நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

(கண்ணாலே...)

பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே - உன்
பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே
ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே - என் 
அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே


காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

(கண்ணாலே...)


பதுமை போல காணும் உந்தன் அழகிலே
நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே
மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
என் மதிமயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே


காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

(கண்ணாலே...)



~~~~~~~~~~~~~~~~~

படம்:- "அடுத்த வீட்டுப் பெண்"; ரிலீஸ்:- 11th பிப்ரவரி 1960; இசை:- ஆதிநாராயண ராவ்; பாடல்:- தஞ்சை N. ராமையா தாஸ்; பாடியவர்:- P.B.ஸ்ரீனிவாஸ் (PBS); நடிப்பு:- T.R.ராமசந்திரன், அஞ்சலி தேவி, K.A. தங்கவேலு, A. கருணாநிதி, Friend ராமசாமி, சட்டாம்பிள்ளை வெங்கடராமன்; திரைக்கதை, வசனம்:- தஞ்சை N. ராமையா தாஸ்; தயாரிப்பு:- அஞ்சலிதேவி, ஆதிநாராயண ராவ், - அஞ்சலி பிக்சர்ஸ், இயக்கம்:- வேதாந்தம் ராகவய்யா.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக