ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

கூவாமல் கூவும் கோகிலம்.....




ஆ.. ஆ.. ஆ.. ஆஆ...
கூவாமல் கூவும் கோகிலம்
கூவாமல் கூவும் கோகிலம் - உன்
கொண்டாடும் காதல் கோமளம்
யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே
கலைமேவும் தமிழ் கூறும் நல் வேதமே
.
(கூவாமல் கூவும்...)
.
கண்மீதில் பாவைபோல் சேர்ந்து நின்றாலே
காதல் எல்லை, பேதமில்லை
கண்மீதில் பாவைபோல் சேர்ந்து நின்றாலே
காதல் எல்லை, பேதமில்லை
அன்பு தேனோடும் நீரோடை நாமே
யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே
என்னாளும் அழியாது என் ஜீவனே
.
கண்ணாடி போலே எண்ணங்கள் யாவும்
பார்வையிலே இங்கு காணுகின்றேன் அன்பே
வார்த்தைகள் ஏனோ?
வீணையின் நாதம் மேவும் சங்கீதம்
நாள்தோறும் நாம் காணும் ஆனந்த இசையாகும்

வீணையின் நாதம் மேவும் சங்கீதம்
நாள்தோறும் நாம் காணும் ஆனந்த இசையாகும்
இன்ப வேளை நமது வாழ்வை
யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே
எந்நாளும் அழியாது என் ஜீவனே
.
இந்நேரம் ஊரில் என்னென்ன கோலமோ
மணமகனோ இங்கே மணமகளோ அங்கே
வேடிக்கை ஆனதே
இந்நேரம் ஊரில் என்னென்ன கோலமோ
மணமகனோ இங்கே மணமகளோ அங்கே
வேடிக்கை ஆனதே
மணம்கள் இங்கே மணமகன் அங்கே
நாம் காணும் ஆனந்தம் தாய்தந்தை அறிவாரோ?
இன்ப வேளை நமது வாழ்வை
யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே
எந்நாளும் அழியாது என் ஜீவனே
.
கூவாமல் கூவும் கோகிலம்
கூவாமல் கூவும் கோகிலம் உன்
கொண்டாடும் காதல் கோமளம்
யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே
எந்நாளும் அழியாது என் ஜீவனே
.
~~~~~~
திரைப்படம்:- வைரமாலை;
ரிலீஸ்:- 25.09.1954;
இசை:- விஸ்வநாதன், ராமமுர்த்தி;
இயற்றியவர்:- கண்ணதாசன்;
பாடியவர்:- திருச்சி லோகநாதன், M.L.வசந்த குமாரி;
நடிப்பு:- பத்மினி, மனோகர்;
தயாரிப்பு:- A.C.பிள்ளை;
டைரக்சன்:- N.ஜகன்நாத்.
~~~~~~

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக