திங்கள், 19 மே, 2014

மடி மீது தலை வைத்து.....



மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்
மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்
மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்


மங்கலக் குங்குமம் நெஞ்சிலே மல்லிகை மலர்கள் மண்ணிலே
மங்கலக் குங்குமம் நெஞ்சிலே மல்லிகை மலர்கள் மண்ணிலே
பொங்கிய மேனி களைப்பிலே பொழுதும் புலரும் அணைப்பிலே

ஆஹா ஓஹோ ம்ம்

மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்


இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே
இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே
சேவல் குரலே கூவாதே சேவல் குரலே கூவாதே
சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே

மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்


வாயின் சிவப்பு விழியிலே மலர்க்கண் வெளுப்பு இதழிலே
வாயின் சிவப்பு விழியிலே மலர்க்கண் வெளுப்பு இதழிலே
சாயும் நிலவின் மழையிலே காலம் நடக்கும் உறவிலே

மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்...

~~~~~~~~~~~~~~
திரைப்படம்:- அன்னை இல்லம் - 1963;
Movie:- Annai illam - 1963; 
இசை:- கே.வி.மஹாதேவன்; 
Music:- K.V.Mahadevan; 
இயற்றியவர்:- கவிஞர் கண்ணதாசன்;  
Lyrics:- Poet Kannadasan; 
பாடியவர்:- டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா; 

Singers:- T.M.Soundararajan, P.Susheela;  
நடிகர்கள்:- சிவாஜி கணேசன், தேவிகா.  
Actors:- Shivaji Ganesan, Devika.

http://youtu.be/xawo1pow95Y 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக