வெள்ளி, 30 மே, 2014

ஆசையக் காத்துல தூது விட்டு...



ஆசையக் காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு - குயில்
கேக்குது பாட்ட நின்னு

(ஆசையக் காத்துல..)

வாசம் பூவாசம் வாலிபக் காலத்து நேசம்
மாசம் தை மாசம் மல்லிக பூமணம் வீசும்
நேசத்துல, வந்த வாசத்துல,
நெஞ்சம் பாடுது சோடியத் தேடுது
பிஞ்சும் வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடையப் போடுது, பார்வையும்
சொந்தம் தேடுது மேடையில

(ஆசையக் காத்துல..)

தேனோ பூந்தேனு, தேன்துளி கேட்டது நானு
மானோ பொன்மானு தேயில தோட்டத்து மானு
ஓடிவர, உன்னத் தேடிவர,
தாழம்பூவுல தாவுற காத்துல
தாகம் ஏறுது ஆசையில
பார்க்கும்போதுல ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசையில

(ஆசையக் காத்துல..)
~~~~~~~~~~~~~~~~~~~~
படம்:- ஜானி - 1985;
இசை:- இளையராஜா;
பாடல்:- கங்கை அமரன்;
பாடியவர்:- எஸ்.பி.சைலஜா;
நடிப்பு:- சுபாஷினி, ரஜினிகாந்த்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக