ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும்
கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் - தேதி
ஒண்ணிலே இருந்து - சம்பள தேதி
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் - இருபத்
தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம் - இருபத்
தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்
திண்டாட்டம் திண்டாட்டம் - சம்பளத் தேதி
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும்
கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்
.
பண்ணிய வேலைக்குப் பலன் தருவது ஒண்ணிலே
தேதி ஒண்ணிலே - மனுஷன்
படாத பாடு படுவது இருபத்தொண்ணிலே
இருபத்தொண்ணிலே
முன்னே பட்ட கடனைத் தீர்ப்பான் ஒண்ணிலே - தேதி
ஒண்ணிலே பின்னும்
மூணாம் பேஸ்து விழுந்தது போலே
முகம் சோர்ந்திடும் இருபத்தொண்ணிலே
.
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும்
கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்
.
தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும்
சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே
தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும்
சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே
அன்புடனே போட்டு வைத்த உண்டியல் வாயைக் கொஞ்சம்
அன்புடனே போட்டு வைத்த உண்டியல் வாயைக் கொஞ்சம்
அகலமாக்கி ஆட்டிப் பார்ப்பார் இருபத்தொண்ணிலே - ஆமா
தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும்
சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே
சினிமா ட்ராமா காட்சிகளுக்கு டிக்கட் கிடைக்காதொண்ணிலே
தியேட்டர் காலி ஆளிருக்காது தேதி இருபத்தொண்ணிலே
சிகரெட் பீடி வெற்றிலை பாக்கு விற்பனை அதிகம் ஒண்ணிலே
தெருவில் எறிந்த துண்டு பீடிக்கு
கிராக்கி வந்திடும் இருபத்தொண்ணிலே
கொண்டவனும் கொண்டவளும் குழந்தை குட்டியோடு
கும்மாளம் கொட்டுவது ஒண்ணிலே - தேதி ஒண்ணிலே அவர்
கூச்சல் கிளப்பிகிட்டு குஸ்திகளும் போட்டுகிட்டு
கோணிக்கொள்வார் இருபத்தொண்ணிலே - கொஞ்சம்
கோணிக்கொள்வார் இருபத்தொண்ணிலே
தம்பிகளின் வாடகை சைக்கிளோட்டம் ஒண்ணிலே
தம்பிகளின் வாடகை சைக்கிளோட்டம் ஒண்ணிலே
தரையில் நடந்து வருவார் இருபத்தொண்ணிலே
நண்பர் நடமாட்டமெல்லாம் ஒண்ணிலே - எந்த
நாயும் எட்டிப் பார்க்காது இருபத்தொண்ணிலே
கொண்டாட்டந்தான் தேதி ஒண்ணிலே - பின்பு
திண்டாட்டந்தான் இருபத்தொண்ணிலே
கொண்டாட்டந்தான் தேதி ஒண்ணிலே - பின்பு
திண்டாட்டந்தான் இருபத்தொண்ணிலே.
~~~~~~~~~~~
படம்:- முதல் தேதி;
ரிலீஸ்:- 12th மார்ச், 1955;
இசை:- T.G. லிங்கப்பா;
பாடல் வரிகள்:- உடுமலை நாராயணகவி;
பாடியவர்:- N.S. கிருஷ்ணன்;
நடிப்பு:- N.S. கிருஷ்ணன் & T.A,மதுரம்;
கதை:- தாதா மிராசி;
தயாரிப்பு:- B.R. பந்துலு; (இப்படம் தான் முதல் தயாரிப்பு)
திரைக்கதை, வசனம் & இயக்கம்:- P. நீலகண்டன்.
~~~~~~~~~~~~
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக