வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

பொண்ணா இல்லை பூவா - வாயாடி

பொண்ணா இல்லை பூவா கண்ணா இல்லை மீனா பொட்டு வச்ச கட்டழகு கட்டி வச்ச மொட்டழகு ரெண்டு கண்ணு போதாது அம்மா
முத்து முத்து பல்லழகு மூடி வச்ச முன்னழகு தந்த பசி தீராது சும்மா
.
(பொண்ணா...)
.
மஞ்சளுக்கு வேரெடுத்து வந்த முகம் இந்த முகம்
மாமலையில் பூவெடுத்து வந்த மனம் இந்த மனம் - உன் பட்டு வண்ணக் கன்னம் ரெண்டும் மின்னுதடி – மண்
தொட்டுக் கொண்ட கூந்தல் என்னைப் பின்னுதடி –உன்
பத்து விரல் முத்தமிடச் சொல்லுதடி – என்
அத்தை மகள் யாருமெனக்கில்லையடி...
.
(பொண்ணா...)
.
தோகையொன்று வந்ததென்று மேகமெல்லாம் கூடுதடி
சொப்பனங்கள் கண்டதுபோல் தேகமெல்லாம் ஆடுதடி – நீ
வெட்டி வெட்டிப் பேசுவது சொர்க்கமடி – கை
தட்டி விட்டு ஓடுவது வெட்கமடி – உன்
சின்னச் சின்னப் பொன்னிதழில் மச்சமடி – நான்
எண்ண எண்ண எண்ணம் மட்டும் மிச்சமடி
.
(பொண்ணா...)
.
ஓடையிலே வெள்ளமெல்லாம் உனைக்கண்டு சொக்குதடி
ஓடுகின்ற மான்களெல்லாம் அச்சமுற்று நிக்குதடி – நீ
தத்தித் தத்திச் செல்லுகின்ற பச்சைக்கிளி – என்
தங்கக் கையில் துள்ளி விழும் இச்சைக் கிளி – என்
உள்ளமெல்லாம் கள்ளத்தனம் பொங்குதடி – அந்த
வெள்ளத்திலும் பிள்ளைக் குணம் தங்குதடி

அடி..வாயாடி
.
(பொண்ணா...)
.............

திரைப்படம்:- வாயாடி;
ரிலீஸ்:- 1973;
இசை:- எம்.எஸ்.வி;
பாடல்:- கண்ணதாசன்;
பாடியவர்:- டி.எம்.எஸ்;
நடிப்பு:- ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா, தயாரிப்பு:- காசி பிக்ச்சர்ஸ்;

இயக்கம்:- மதுரை திருமாறன்.

`````````````

https://youtu.be/8QqdB-pUi9w



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக