வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

முல்லை பூ போலெ ரெண்டு மூக்குத்தி மின்னுதடி

முல்லை பூ போலெ ரெண்டு மூக்குத்தி மின்னுதடி 

முல்லை பூ போலெ ரெண்டு மூக்குத்தி மின்னுதடி - உன்தன் 
முந்தானை மேலே கூந்தல் நாட்டியமாடுதடி 
முல்லை பூ போலெ ரெண்டு மூக்குத்தி மின்னுதடி
சித்தன வாசலிலே அழகு சித்திரம் பாடுதய்யா 
சித்தன வாசலிலே அழகு சித்திரம் காணுதய்யா - அந்த 
சித்திர மேனியிலே உந்தன் முத்திரை போடுதய்யா 

வேலவன் வேல் போலெ ரெண்டு விழிகள் மின்னுதையா - புது 
வெள்ளி ரத்தம் போலெ உந்தன் வடிவம் பொங்குதய்யா  
வேலவன் வேல் போலெ ரெண்டு விழிகள் மின்னுதையா 
.
இல்லை இல்லை  என்கிற இடையில் எத்தனை மலரடியோ 
இல்லை இல்லை  என்கிற இடையில் எத்தனை மலரடியோ 
அது ஏதோ ஒன்று என்னிடம் சொல்வது எத்தனை கதையடியோ 

நில்லா இரவில் பொல்லா நிலவில் நேருக்கு நேர் வருவேன் 
நில்லா இரவில் பொல்லா நிலவில் நேருக்கு நேர் வருவேன் - அன்று 
எல்லா கலையும் வில்லாய் எடுத்து வேலாலே தருவேன் 
.
முல்லை பூ போலெ ரெண்டு மூக்குத்தி மின்னுதடி - உன்தன் 
முந்தானை மேலே கூந்தல் நாட்டியமாடுதடி  
வேலவன் வேல் போலெ ரெண்டு விழிகள் மின்னுதையா  
.
பாட்டுக்கால்கள் பட்டதனாலே பஞ்சு விளைந்ததடி - உன் 
சிட்டுக் கைகள் தொட்டதனாலே நெஞ்சும் மலர்ந்ததடி 
கொட்டும் மழையும் பனியும் தென்றலும் கனலாய் காயுதய்யா - உன் 
கூட இருந்தால் பாடி மகிழ்ந்தால் குளிராய் குளிருதய்யா 

பஞ்சணை மீது மலர்களை தூவி பழகுவதென்னாலோ 
பாலும் பழமும் கைகளில் ஏந்தி வருவதும் எந்நாளோ 
பஞ்சணை மீது மலர்களை தூவி பழகுவதென்னாலோ 
.
................
திரைப்படம்:- நல்ல முடிவு; 
ரிலீஸ்:-  மார்ச் 2nd, 1973;
இசை:-  MSV;  
பாடல்:- கண்ணதாசன்; 
பாடியவர்கள்:- TMS, P.சுசிலா;   
நடிப்பு:- ஜெமினி கணேசன், ஜெயந்தி;
தயாரிப்பு:- S.A. ராஜமாணிக்கம்; (பூங்கோதை பிக்சர்ஸ்); 
இயக்குனர்:- C.N. சண்முகம்.   

................







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக