வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

நான் பேச வந்தேன் சொல்ல தான் ஓர் வார்த்தை இல்லை

நான் பேச வந்தேன் சொல்ல தான்
ஓர் வார்த்தை இல்லை, திருவாய் மொழி திருவாசகம் நான் கேளாமல் எனக்கேது ராகங்கள்... நான் பேச வந்தேன் சொல்ல தான் ஓர் வார்த்தை இல்லை, உன் வாய் மொழி, மணிவாசகம் நீ சொல்லமல் என் நெஞ்சில் சொல்லில்லை,  . (நான் பேச வந்தேன் சொல்ல தான் ஓர் வார்த்தை இல்லை,) . ஏழிசை பாடும் இமைகள் இரண்டும் பட பட பட வென வரும் தாபங்கள், ஆலிலை மீது, தழுவிடும் காற்று சல சல சல வென வரும் கீதங்கள்,  குலமகள் நாணம் உடன் வரும் போது மௌனமே இறைவன் தூது, ஒரு கிளி ஊமை ஒரு கிளி பேதை இடையில் தீராத போதை......  . (நான் பேச வந்தேன் சொல்ல தான் ஓர் வார்த்தை இல்லை,) . கார்குழல் மேகம் மூடிய நெஞ்சில் கல கல கல வென வரும் எண்ணங்கள்,  ஒவியம் தீட்டி காட்டிடும் கன்னம் பள பள பள வென வரும் கின்னங்கள்,  சொல் என கண்ணும்   நில் என நெஞ்சும்  சொல்வதே பெண்ணின் தொல்லை நில் என நெஞ்சும்  சொல்வதே பெண்ணின் தொல்லை சிறுகதை ஒருநாள் தொடர்கதை ஆனால் அது தான் ஆனந்த எல்லை..... . நான் பேச வந்தேன் சொல்ல தான் ஓர் வார்த்தை இல்லை, உன் வாய் மொழி, மணிவாசகம் நீ சொல்லமல் என் நெஞ்சில் சொல்லில்லை.
~~~~~~~~
Movie:-Paalooti Valartha Kili, - பாலூட்டி வளர்த்த கிளி; 
Year:- 1976;
Music:- Ilayaraja;
Lyrics:- Kannadasan; Singers:-SPB, S.Janaki; Actors:- Vijayakumar & Sripriya.;
Director:- Devaraj, Mohan.
~~~~~~~~
https://youtu.be/9ZNJncW2220



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக