செவப்புக் கல்லு மூக்குத்தி
சிரிக்க வந்த மான்குட்டி
ஆஹா
தங்க முகத்தில குங்குமப் பொட்டு வைச்சுக்கிட்டு - நீ
எங்கடி போற சுங்கிடி சேலைக் கட்டிக்கிட்டு
தான் போறப் போக்கில் மான் குட்டி போகும்
எங்கேன்னு தான் சொல்லுமோ
பேசாத மானை தேடாமல் தேடி
பின்னாலே யார் வந்ததோ
.
(செவப்பு...)
.
மனசு வச்சேன் உன் மேலே
மறைச்சு வைச்சேன் சொல்லாமே
அப்படி சொல்லடி சிங்காரி
அணைச்சுக் கொள்ளடி ஒய்யாரி
சிரிச்சு சிரிச்சு நெருங்கி வந்தா எனக்கு சந்தேகம்
நெருங்கி நெருங்கி பழகி விட்டா இருக்கு சந்தோஷம்
புதுசா ஒரு தினுசா இள வயசா வந்த பரிசா
.
(செவப்பு...)
.
வெளக்கு வச்சு பாய் போட்டு
தெருக்கதவ தாள் போட்டு
வெளக்கு வச்சு பாய் போட்டு
தெருக்கதவ தாள் போட்டு
அரைச்ச சந்தனம் நீ பூச
அடுத்த கதைய நான் பேச
விடிய விடிய தூங்காமே முழிச்சிருப்போமா
வெடிஞ்ச பொறகு நடந்ததெல்லாம்
நெனச்சிருப்போமா
திருநாள் ஒண்ணு வரலாம் இனி தரலாம்
தந்து பெறலாம்
.
ஆஹா
சரிகைப் பட்டு மாப்பிள்ளை
மயக்க வந்த ஆம்பிள்ள
வெத்தலப் பாக்கு வைக்கிற தேதி சொல்லு மச்சான்
என்னை கள்ளச்சிரிப்பிலே கொள்ளையடிச்சது இந்த மச்சான்
~~~~~~
திரைப்படம்:- எல்லோரும் நல்லவரே;
திரைப்படம்:- எல்லோரும் நல்லவரே;
ரிலீஸ்:- 1975;
இசை:- வி. குமார்;
பாடல்:- கண்ணதாசன்;
பாடியவர்கள்:- TMS, பி. சுசிலா;
நடிப்பு:- முத்துராமன், மஞ்சுளா;
தயாரிப்பு & இயக்கம்:- ஜெமினி S.S. பாலன்.
..
https://youtu.be/mzgKodQXZ-M
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக